இலங்கை வந்துள்ள லாப்ஸ் எரிவாயு; அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை
இலங்கைக்கு வந்துள்ள லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு 9.30 மணியளவில் கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்ததாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் மாதிரிகள் நுகர்வோர் அதிகாரசபையின் ஆய்வகங் களில் பரிசோதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிவாயு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதுடன், நாட்டிற்குக் கொண்டுவரப்படும் அனைத்து எரிவாயுக்களையும் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப் பலிலிருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளைத் தொடர்ந்தும் ஆய்வுக் குட்படுத்தி வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வு நடவடிக்கைகள் அங்கீகார சபையினால் மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.