மக்களுக்கு லங்கா சதொச தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் லங்கா சதொச நிறுவனம் 5 புதிய மெகா கடைகளையும் பத்து வழக்கமான லங்கா சதொச கடைகளையும் திறக்க இலக்கு வைத்துள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்றைய தினம் (03-01-2024) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இடனை கூறினார்.
இந்த ஆண்டு (2024) இறுதிக்குள் லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 500 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் லங்கா சதொசவின் மொத்த வருமானத்தை கிட்டத்தட்ட 70 பில்லியன் ரூபாயாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
அதன்படி, இயக்க இலாபத்தினை கிட்டத்தட்ட1.5 பில்லியன் ரூபாயாகவும், பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிறுவனத்தின் நிகர இலாபத்தினை 500 மில்லியன் ரூபாயாக பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கான புதிய திட்டமொன்றும் 2024 இல் எதிர்பார்க்கப்படுகிறது.