திடீரென நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு! மின் தடை அபாயம்?
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்றாம் இயந்திரத்தில் எதிர்வரும் ஏப்ரலில் பாரிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கவிருந்த நிலையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
CEB has informed of a breakdown in unit 3 of Norochcholai power plant. Unit 3 was due to undergo major overhaul maintenance in April. To ensure an uninterrupted power supply, CEB owned Diesel & Fuel Oil Power plants will be used. There will be No power cuts due to the breakdown.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 19, 2023
தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த பழுதால் மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.