உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை; விடுக்கப்பட்ட கோரிக்கை
மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்நௌபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் ஆயிரத்து 279 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு , இன்னும் 700 சரீரங்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளாந்தம், 50க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் நிலையில், சரீரங்களை அடக்கம் செய்வதற்கான மற்றுமொரு இடத்தினை சுகாதாரத்துறை மற்றும் நிபுணர்கள் விரைவில் அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.