லாப் சமையல் எரிவாயு விநியோகம் மக்களால் இடைநிறுத்தம்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் லாப் சமையல் எரிவாயு இன்று (21) விநியோகிக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பால் அது இடைநிறுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.
ஓட்டமாவடி உட்பட பல இடங்களில் எரிவாயு விநியோகிக்கப்பட்ட நிலையிலும், ஆரையம்பதியில் எரிவாயு பெற வந்திருந்தவர்களின் குழ்பபம் காரணமாக விநியோகம் இடை நிறுத்தப்பட்டது.
அதேவேளை லாப் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக, நேற்று மாலை முதல் பொது மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர். ஆரையம்பதியிலுள்ள லாப் சமையல் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு முன்பாக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
இதன்போது இன்னொரு பிரதேசத்திற்கான எரிவாயுவை எடுத்துச் சென்றபோது அதனைத் தடுத்து நிறுத்திய பொலிஸாரும், இராணுவத்தினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் லாப் சமையல் எரிவாயு வழங்கி பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில், விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லாப் சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட விநியோகஸ்தர் தெரிவித்தார்.