காலி முகத்திடலில் கடலலையை மிஞ்சிய மக்களின் கோக்ஷம்!
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் தற்போது, காலி முகத்திடலில் பெருந்திரளாவர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதியும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறு கோஷமெழுப்பி கொண்டிருக்கின்றனர்.
அந்த கோஷம், காலிமுகத்திடல் கடலலை சத்தத்தையும் மிஞ்சி ஒலிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நாடாளுமன்றக கட்டடத் தொகுதியில், கடந்த 6 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
அந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்தியதாகவும் எனினும், ஜனாதிபதி அதற்கு மறுத்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது.
மக்கள் கூட்டத்தால் நிரம்பிய காலி முகத்திடல்; அடிபணிவாரா கோட்டாபய?

