யாழ். கொடிகாமத்தில் இளைஞனை தாக்கி வீடு புகுந்து கொள்ளையிட்ட மூவர் சிக்கினர்!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளுக்கு பின்னர் நாளை சனிக்கிழமை (09-12-2023) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். கொடிகாமம் - வெள்ளாம்போக்கட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை (06-12-2023) வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் இருந்த நகை, பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச் சம்பவத்தின் போதும், காயப்பட்ட இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.