தமிழர் பகுதியில் வெள்ளக்காடான விவசாய நிலங்கள்! கவலையில் விவசாயிகள்!
திருகோணமலையில் உள்ள கிண்ணியா - கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த பகுதியில் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும் போக வேளாண்மை பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பராக்கிரமபாகு சமுத்திரம், மகாவலி, கந்தளாய்க்குளம் முதலான பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தினால் கண்டக்காடு, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
இதனால் கடன்பட்டு, கஷ்டப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.