இளைஞனை கடத்தி சரமாரி தாக்குதல்; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திச் சென்ற குழுவொன்று காட்டுப்பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதையடுத்து குட்டிகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினால் இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய, கிருலவெல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது, குற்றவாளிகள் வேனில் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.