கடத்தப்பட்ட பதின்ம வயது மலையக சிறுமி மீட்பு; இளைஞர் கைது
சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் கடந்த 3 ஆம் திகதி வான் ஒன்றில் கடத்தப்பட்ட 15 வருடம் 8 மாதம் வயதுடைய சிறுமி பேருவளையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் 3ஆம் திகதி காலை 8 மணிக்கு தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளையில், குறித்த சிறுமி வெள்ளை நிற வேன் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டதாக சிறுமியின் தந்தை முறைப்பாடளித்திருந்தார்.
சிறுமி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி
இதைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸாரின் தேடுதலுக்கு அமைய நேற்று பேருவளை பகுதியில் உள்ள 26 வயது உடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று 5 ம் திகதி விசாரணையின் பின்னர் ஹட்டன் நீதி மன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மீட்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.