மன்னார் மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்
மன்னார், பறங்கி ஆறு மற்றும் பாலி ஆறுகளின் வெள்ள அபாயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.

அவதானம்
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினூடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கால் நடைகளைப் பராமரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை அவதானித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.