திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!
களுத்துறை மாவட்டத்தில் திடீரென வாந்தி ஏற்பட்டு சுகயீனமுற்ற நிலையில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப தலைவரான கணவர் , வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (27-03-2024) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.