குரு புதன் சூரியன் மகா கூட்டணி ; ராஜயோகம் பெரும் ராசிக்காரர்கள்
ஜூன் மாதத்தில் குரு, சூரியன், புதன் மிதுன ராசியில் இணையப் போகின்றன. அதாவது ஜூன் 06ஆம் திகதி புதன் மிதுன ராசியில் காலை 9:15 மணிக்கு சஞ்சரிக்கிறார்.
மேலும், சூரியன் ஜூன் 15ஆம் திகதி காலை 6:25 மணிக்கு மிதுன ராசியில் நுழைகிறார். குருபகவான் ஏற்கனவே மிதுன ராசியில் இருக்கிறார். இதன் விளைவாக சக்தி வாய்ந்த திரிகிரஹ யோகம் உருவாகிறது.
சூரியன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையும் போது, குரு ஆதித்ய யோகமும், புதாதித்ய யோகமும் உருவாகும். இந்த திரிகிரகி யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பயன் அளிக்கப் போகிறது என்று நாம் இங்கு பார்போம்.
மிதுனம்
மிதுன ராசியில் திரிகிரகி யோகம் உருவாகுவதால், நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் வெற்றியைப் பெற முடியும். மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க முடியும். மரியாதை பெற முடியும். தொழில் மற்றும் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களால் இழந்த வேலையை திரும்பி கிடைக்கும். வீடு, சொத்து அல்லது கார் வாங்கும் கனவுகள் நனவாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம்பெயர விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில நல்ல செய்திகள் வரக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகம் சாதகமான விளைவை ஏற்படுத்தும். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள முடியும். உயர்கல்விக்கான பாதை திறக்கும். அரசு வேலையில் உயர் பதவியை அடைவதில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரகி யோகம் சாதகமான விளைவை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வியாபாரத்தில் நன்மை பயக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரகி யோகம் நல்ல பலனைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும். குழந்தைகள் பெற்றோருக்கு நல்ல செய்தியைச் சொல்லலாம். ஆன்மீகத் துறையில் மக்களின் நாட்டம் அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். வாகனம் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். பதவி மற்றும் கௌரவம் அதிகரிப்பதோடு, மரியாதையும் அதிகரிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள் பெரும் லாபத்தைப் பெறலாம். பெற்றோருடனான உறவுகள் மேம்படும்.