பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபர் ஒருவருக்கு 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும, அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு கடந்த 26 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 கிலோ கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கஞ்சா பயிரிட்டமை ஆகிய குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 5,000 ரூபா லஞ்சம் வழங்கியமை தொடர்பிலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், தண்டப்பணம் செலுத்தப்படாவிட்டால் மேலதிக 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.