யாழ்ப்பாணம் வயாவிளான் திக்கம்புரை பேருந்து சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் வயாவிளான் திக்கம்புரை சந்தியில் இருந்து யாழ்.நகருக்கான பஸ் சேவை இன்று(16) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வயாவிளான் திக்கம்புரை சந்தியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த சேவை, சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி வழியாக குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி ஊடாக சென்று தெல்லிப்பழை வைத்தியசாலையை அடைந்து KKS வீதி வழியாக யாழ்.நகரை சென்றடைகின்றது.
இந்நிகழ்வு இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய அதிகாரிகள், மதகுருமார், பொதுமக்கள் பலரின் பங்கேற்புடன் இன்று காலை 7 மணியளவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.