யாழில் இன்றிரவு ஏற்பட்ட பாரிய விபத்து: இளைஞன் வைத்தியசாலையில்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி செட்டியார் மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்றிரவு (27-12-2021) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அராலி – செட்டியார்மடம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் அராலியை சேர்ந்த 21 வயது இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.