யாழில் ரணிலுக்கு எதிராக போராட்டம்: பொலிஸாரின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்க கோரி யாழ் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும், சட்டத்தை மீறாத வகையில், ஜனநாகய ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாளையதினம் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை யாழில் தாங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இதன்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கருதி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உட்பட 8 பேருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கமைய செய்வாய்க்கிழமை நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவிற்கு அமைய, வழக்கின் 8 ஆவது பிரதிநிதியான தவத்திரு வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் இன்றையதினம் (03-01-0=2024) ஆஜராகி தமது நிலைப்பாட்டினை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.