மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சி ; அகில இலங்கை ரீதியில் யாழ் இந்துக் கல்லூரி சாதனை!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் அளவில் சாதனை படைத்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவர்களில் சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் சதவீதம் 85.19 எனும் அதிகூடிய அளவை பதிவு செய்துள்ளது.

Merit முறையில் மாணவர்களின் சதவீதம் 85.19
நடந்து முடிந்த 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர்களின் மருத்துவ பீட விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இலங்கை முழுவதும் 333 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகியுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் 18 பாடசாலைகளில் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள், சிறப்பு தேர்ச்சியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
மேலும், கொழும்பு ஆண்கள் பாடசாலையான ரோயல் கல்லூரி மற்றும் பெண்கள் பாடசாலையான விசாகா வித்தியாலத்தில் 75 வீதமான மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
அதேவேளை கடந்த காலங்களில் வடக்கு மாணவர்கள் கல்வியில் வீழ்ச்சி அடைத்து வருவதாக பலரும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்து யாழ் இந்து கல்லூரி மாணவர்கள் , மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.