யாழ் கோட்டை முனீஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்கள எல்லைக்குள்
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் ஆலய முன்றலில் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டமும் நேற்றைய தினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.

ஆலய அனுமதியுடன் எல்லைக் கல்
இதன் போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் யாழ் கோட்டை பகுதியைச் சூழ தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை எல்லைக்கல் நாட்டப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டது. அதன் போது,
முனீஸ்வரர் ஆலயப் பகுதியும் தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்குள் வருவதால் எல்லை கல்லை நாட்டும்போது ஆலயத்துடன் கலந்துரையாடி சம்மதத்தை பெற்றே திட்டத்தை மேற்கொண்டோம்.

தமது ஆலய வளாகத்துக்குள் வெளியிடங்களில் இருந்து வருகை தரும் வாகனங்கள் அதிகம் வருவதால் மாமிச உணவுகள் ஆலய சூழலில் அவதானிக்கப்பட்டுள்ளதால் தமக்கு வாயில் கதவு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன் வைத்தார்கள்.
அதன் அடிப்படையில் குறைத்த பகுதியில் 7 கதவுகள் போடப்பட உள்ள நிலையில் அதில் ஒரு கதவை முனீஸ்வரர் ஆலயத்திற்கு போடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்