தமிழர் பகுதியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாண பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியவர் வீதியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (23-08-2023) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்று காலை 4.30 மணிக்கு குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு வேலைக்கு சென்று பிற்பகல் 1 மணியளவில் வீட்டுக்கு வரும்போது, வீதியில் விழுந்து உயிரிழந்தார்.
ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 37 வயதான இராசேந்திரம் நாகேஷ்வரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாரடைப்பு காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.