யாழில் திருவெம்பாவை முன்னிட்டு பக்தர்கள் பாத யாத்திரை
புனிதமான மார்கழி திருவெம்பாவை விரதம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆலயங்கள் தோறும் அதிகாலையில் விசேட பூஜைகளுடன் திரும்வெம்பாவை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அதிகாலையில் பக்தர்கள் ஆலயங்களுகு சென்று திருவெம்பாவை பாடல்களை பாடி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாத யாத்திரை 13 ஆவது வருடமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த பாத யாத்திரை மாதகல் சம்பில்துறை சிவபெருமான் திருச்சொரூப முன்றலில் ஆரம்பமாகி ஈழத்துச்சிதம்பரம் நோக்கி ஆரம்பமானது.

இந்த பாத யாத்திரையில் பெருமளவான சிவனடியார்கள், மாணவர்கள் நந்தி கொடி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
