யாழில் மீண்டும் விஷமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி
யாழ்செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ளமை மக்கள் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அணையா விளக்கு போராட்டம் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.
இந்நிலையில், அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பின் அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு புதிப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது.