இலங்கைக்கு அவசர உதவியை வழங்க முன்வந்துள்ள மற்றொரு வெளிநாடு!
அண்மைக்காலமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகின்றது.
இதற்காக 125 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குவதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அவசர உதவியை இத்தாலி வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இத்தாலிய இருதரப்பு அவசர நிதியத்தின் மூலம் இந்த பங்களிப்பு வழங்கப்படும் என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சப்ளை செயின் மேனேஜ்மென்ட் செயல்முறைக்கு ஏற்ப சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்ட கொள்முதல் படி வெளிநாடுகளில் உள்ள சப்ளையர்களுக்கு நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் மேலும் கூறியது.
இந்த தகவலை இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மன்னெல்லா (Rita mannella) தெரிவித்துள்ளார்.
