தனது மகளுக்கு இந்து முறைபடி திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தந்தை! பலரும் ஆச்சர்யம்
இந்தியாவின் கர்நாடகாவில் இஸ்லாமிய தந்தை ஒருவர் தனது வளப்பு மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்த பெண் பூஜா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூஜாவின் பெற்றோர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டனர்.
இதனையடுத்து அந்த சிறுமியை அவரது உறவினர்கள் யாரும் எடுத்து வளர்க்க முன் வரவில்லை. இந்நிலையில் அவர் வீட்டின் அருகில் இருந்த மஹபூப் மஸ்லி என்ற இஸ்லாமியர் அந்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்தார்.
தத்தெடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்த நிலையில் பூஜாவிற்கு 18 வயத கடந்தது. இதனையடுத்து அவருக்கு திருமணம் செய்துவைக்க நினைத்து ஒரு இந்து மணமகனை பார்த்து அவருக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார் அந்த இஸ்லாமிய தந்தை.
இந்த திருமணம் கடந்த ஜூலை 31ம் திகதி இடம்பெற்றுள்ளது. இது குறித்து மஹபூப் கூறுகையில்,
"நான் பூஜாவிற்கு அவளது மதத்தை சேர்ந்தவரையே திருமணம் செய்து வைப்பதை கடமையாக வைத்திருந்தேன். பூஜா கடந்த 10 ஆண்டுகளாக எங்களுடன் தான் இருக்கிறார். ஒரு முறை கூட அவரை இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற நாங்கள் வற்புறுத்தவில்லை. அவரை கட்டாயப்படுத்த மதம் மாற்றுவது எங்கள் மதத்திற்கு எதிரானது என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இஸ்லாமிய தந்தை தமது மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.