பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுபவர் இவர்தானா? ஷாக்கில் ரசிகர்கள்
தமிழகத்தில் பிரபல்யமான டிவியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது, இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் யார் யார் இன்று காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்ற நேற்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதேவேளை கடந்த வாரம் முதல் நாமினேஷன் என்பதால் எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் இந்த வாரம் தலைவராக சக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யபட்டுள்ளனர்.
நேற்று அபிஷேக், மதுமிதா, நாதியா, சின்ன பொண்ணு வருண் ஆகிய 5 பேரின் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நாதியா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாதியாவை அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.