எதிர்வரும் வாரங்களில் இருளில் மூழ்குமா இலங்கை?
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாகவே இந்த நிலை ஏற்படக்கூடும் என கூறப்படுகின்றது.
இதற்கமைய, தற்போது அமுல்படுத்தப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.