அரசாங்கத்திலிருந்து விலகுகிறதா சுதந்திர கட்சி?
அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 5 மணிக்கு சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் கூடி இறுதித் தீர்மானம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேற்று (03) மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் ஒன்றுகூடினர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.