பிக்பாஸ் வருண் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்!
பிரபல தொலைக்காட்டிசியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்திருக்கும் வருணை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும். இதற்கு முன்பு அவரை , பப்பி, கோமாளி என பல படங்களில் பலரும் பார்த்து இருக்கலாம்.
வருண் வெறும் நடிகர் மட்டுமில்லை அதை தாண்டி அவரை குறித்து தெரிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மருமகன் தான் வருண்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த வருண் ரொம்ப ரொம்ப சிம்பிள் என்பதுடன், பார்க்கவும் சரி பழகவும் சரி மிகவும் எளிமையான மனிதராம். நண்பர்களுடன் வெளியில் செல்வது, சைக்கிளிங், ட்ரக்கிங் என சாதாரண பசங்களை போல தான் வளர்ந்து இருக்கிறார்.
வருணுக்கு சினிமா மேல் ஆசை. படங்களிலும் நடிக்க வேண்டும் என்று கல்லூரி படித்த காலம் முதலே மீடியாவில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் வருண் தனது கெரியரை சாதாரண உதவி இயக்குனராக தான் தொடங்கினார். பின்னர் இயக்குனர் ஏ.ல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் இருந்து பின்பு அவர் இயக்கிய தலைவா படத்திலே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொடர்ந்து வருணுக்கு பட வாய்ப்புகள் வருணுக்கு குவிய தொடங்கியது. கோமாளி, வனமகன், பப்பி, ஒருநாள் இரவில் , போகன் ,நெருப்புடா, சம் டைம்ஸ், சீறு என பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் பப்பி படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் வருணுக்கு வாங்கிகொடுத்தது.
இந்நிலையில் தனக்கான அடையாளம் மற்றும் புகழ், பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுடன் வருண் பிக் பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்து இருக்கிறார். இதுக்குறித்து தனது நண்பர்களுடனும் வருண் கலந்து பேசினாராம். அப்போது சிலர் நெகடிவ் விமர்சனங்கள் வந்திட போகுது வேண்டாம் என்றும் கூறினார்களாம்.
எனினும் த ன்னுடைய கெரியரில் நான் தனியாக தெரிய வேண்டும், வருண் என்றால் யாரு? என்ற இமேஜ் மக்களுக்கு தெரிய வேண்டும் என எடுத்த முடிவில் உறுதியாக இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள நுழைந்திருக்கிறார் வருண்.
இந்நிலையில் இனி வரும் நாட்களில் வருணின் கேம் கண்டிப்பாக வேற மாதிரி இருக்கும் என அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றார்கள்.