வரலாற்றில் முதல்முறை... சர்வதேச நாடாளுமன்ற சங்க அமர்வில் கலந்துகொள்ளும் சாணக்கியன்!
வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது.
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 நாடுகள் உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், பிரித்தானியா, ஒஸ்ரியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக நானும் பேச்சாளர்களாக கருத்துக்களை வெளியிட்டிருந்தோம்.
இலங்கையில் சுற்றுசூழலினை அரசாங்கமே அழிக்கின்றது. அப்படியான நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) கிளஸ்கோ மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் 100 சதவீதம் நடைமுறையில் இல்லை. அவை நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதனை சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டேன்.