சவுதிக்கு சென்ற முல்லைத்தீவு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி; கண்ணீருடன் விடுத்த கோரிக்கை
பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற முல்லைத்தீவு பெண் ஒருவர் அங்கு தான் அனுபவித்த கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி வேதனை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகளிடம் அவர் தெரிவிக்கையில்,
பெரும் துன்பத்தை அனுபவித்த பெண்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன்.
ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன். நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது.
போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.
தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன்.
ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.
எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் குடுமப வறுமையை போக்கவே அங்கு சென்றேன். ஆனாலும் தற்போது என்னிடம் பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன் என்றும் தெரிவித்தார்.