தயாசிறி ஜயசேகரவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு Dayasiri Jayasekara கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு இன்றைய தினம் (08-01-2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால, குறித்த பதவியில் தொடருவதற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விதிக்கப்பட்டுள்ளது.