இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!
நாடளாவிய்ரீதியில் இன்றைய தினமும் ஆறரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலத்தில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணிக்கும் இரவு 10 மணிக்குமிடையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் கொழும்பு நகரின் வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.