இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி குறித்து வெளியான தகவல்
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு மத்திய வங்கி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வாக இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டொலர்களில் சுங்கத்தீர்வை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், சிலரிடம் கையிருப்பில் உள்ள டொலர்களை சந்தைக்கு கொண்டுவர முடியும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வழமையான முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது எனவும், அது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு உசிதமானதல்ல எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி சொகுசு பண்டங்கள் இறக்குமதி செய்வதனை ரத்து செய்வதனை விடவும் அவற்றுக்கு கூடுதலாக வரி அறவீடு செய்வது மிகவும் பொருத்தமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.