யாழ் சிறுவர்கள் தொடர்பில் பகீர் தகவல்!
யாழ் மவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் போதைப்பொருள் பாவனை
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. அதன்படி யாழில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகியுள்ளதாக்வும் கூட்டத்தில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.