பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை குறித்து வெளியான தகவல்
University of Peradeniya
Sri Lanka
Education
Flood
By Viro
டித்வா சூறாவளி காரணமாக தடைபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, கால்நடை வைத்திய விஞ்ஞான பீடம், விவசாய பீடம் மற்றும் பல் மருத்துவ விஞ்ஞான பீடம் என்பன மீண்டும் திறக்கப்படும் என பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சொத்துக்கள்
இதேவேளை, 2026 ஜனவரி 05ஆம் திகதி விஞ்ஞானம் மற்றும் கலை பீடங்களை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.
முகாமைத்துவ பீடத்தை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அனர்த்தத்தினால் சேதமடைந்த பல்கலைக்கழக சொத்துக்களை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US