இலங்கை பணவீக்கம் தொடர்பில் வெளியான புதிய அறிக்கை!
இலங்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21-05-2024) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ந்தும் 5 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவல்லாப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது