அறிகுறிகள் இல்லாமல் தொற்றை பரப்பும் நபர்கள் சமூகத்தில் இருக்கலாம்!
கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லாமல் தொற்றினை பரப்பும் நபர்கள் சமூகத்தில் இருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதாரத் துறையால் தினமும் தற்போது 5,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் நோய்த்தொற்றுடையவர்கள் நோய்த்தொற்றுக் குப் பிறகு மட்டுமே சுகாதாரத் துறையில் கண்டறியப்படுகிறார்கள் .
எனவே வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க ஒவ்வொருவரும் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை நாட்டில் ஏற்படுகின்ற கொவிட் மரணங்களின் அதிகரிப்புபானது, நோயாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்பதையே பிரதிபலிப்பதாக விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.