இந்திய – இலங்கை அமைச்சர்கள் இடையே முக்கிய சந்திப்பு!
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினை சீர் செய்யும் நோக்கில் அடுத்த வாரம் இந்திய – இலங்கை அமைச்சர்கள் இடையே சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்துடன் வொஷிங்டனில், பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள அதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) இந்திய அமைச்சரவை பிரதிநிதிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர், இந்திய பொருளாதார தலைமை ஆலோசகர் மற்றும் பொருளாதாரதுறை செயலாளர் ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதென நேற்று தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        