டி20 உலக கிண்ணம்... இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்றையதினம் கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெர்வு செய்ததது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக க்றிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்து இதனால் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜொஸ் பட்லர் 23 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களையும், கைப்பற்றினர்.
இந்த வெற்றிமூலம் இந்திய அணி நாளைய தினம் (29-06-2024) இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கின்றது.