இலங்கையில் அதிகரித்த பணவீக்கம்....வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயமானது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கமானது தற்போது 2.1 உயர்ந்து தற்போது கடந்த ஒக்டோபர் மாதம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையானது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவை இடம்பெற்றது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 0.83 சதவீதமும், உணவு அல்லாத பொருட்களின் விலை 1.23 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மதத்தை விட தற்போது அதிகளவில் பண வீக்கம் ஏற்பட காரணமாக நாட்டில் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே காரணமாக கூறப்படுகிறது.