மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள உயர்வு ; விமர்சனம் தெரிவித்துள்ள அமைச்சர்கள்
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்கு எதிராக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருதரப்பும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
CBSL அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு குறித்து தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஏனெனில் அது சட்டமன்றத்திற்கு நிதி அதிகாரம் உள்ளது, அத்தகைய சட்டத்தை கொண்டு வருவோம்,” என்றார்.
மத்திய வங்கி அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்கு பதிலளிக்கும் வகையில், “மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர்கள் அதிக சம்பளத்திற்கு தகுதியுடையவர்களாக மாறுவதற்கு ஏதேனும் சிறப்புப் பணிகளைச் செய்கிறார்களா” என அவர் வினவியுள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவும் சம்பள அதிகரிப்பை விமர்சித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் மாதாந்த சம்பளம் ரூபா 1.6 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, அலுவக பணியாளர் ஒருவரின் சம்பளம் 70,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.