பல நாட்களாக வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் ; இரண்டு சந்தேகநபர்கள் கைது
கண்டி முல்லேரிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் பல நாட்களாக காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லேரிய மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் மனைவி முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வர்த்தகர் கடந்த மாதம் 17ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்த போதிலும், அவர் தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
48 வயதான குருவிட ஆராச்சியின் டொன் ஹரிச்சந்திர என்ற வர்த்தகர் வெலி சாந்த என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவர் கட்டிட பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக திட்டமிட்ட குற்றவாளி ஒருவர் குறித்த வர்த்தகரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.