உக்ரைன் போர் எதிரொலி; ஐநா சபையில் அநாதரவான ரஷ்ய அமைச்சர்!
ஐநா சபையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசத்தொடங்கியதும் பல நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது 8-வது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத் தி வரும் நிலையில் இன்று எட்டாவது நாளாகவும் போர் நீடித்து வருகின்றது. இதனிடையே உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழத்த நிலையில் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.
அதேசமய்ம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐநா சபையில் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் பல நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெ லவ்ரொவ் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.
அவர் ஏற்கனவே பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஐநா சபையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல நாடுகளில் உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.
இதனால் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் காணொளி காட்சி வீடியோவை பார்க்க யாரும் இல்லாமல் தனியாக ஒடிக்கொண்டிருந்தது.
சுமார் 100-க்கும் மேற்பட்ட தூதர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் ரஷ்ய அமைச்சரின் பேச்சை புறக்கணித்து ஐநா சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.