தமிழர் பகுதியில் இளைஞர்கள் இருவரின் தகாத செயல்
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத குறித்த கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை ஒன்றை மறித்து சோதனை செய்த போது விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணையின் பின்னர் இன்று (01) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.