விரைவில் இலங்கையில் சட்டமாக்கப்படும் தகாத தொழில்!
நாட்டில் விரவில் தகாத தொழிலும் சட்டமாக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க இலங்கையில் கஞ்சா வளர்க்க வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர் வெட்கமில்லாமல் கூறியது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொன்சேகா, வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்காக தகாத தொழிலை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்றும் கூறினார். இவ்வாறான விடயங்களை ஆன்மீக ரீதியில் நோக்க வேண்டும் எனவும், நாடு பணத்திற்கு அடிமையாகி விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை தற்போதைய குடும்ப ஆட்சியில் கீழ் தோட்டங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சரத் பொன்சேகா, இது விவசாயிகளை கஞ்சா நடுவதற்கு திசை திருப்பும் முயற்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இதுபோன்ற முயற்சிகளுக்கு விவசாயிகள் பலியாகிவிட வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டில் நிறுத்தப்படும் எனவும் கூறினார்.