இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பொருட்கள்
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் கிரீம் வகை மற்றும் மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பிட்டிப்பனை லெல்லம பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மூன்று டிங்கி படகுகள் மூலம் இந்தியாவிலிருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள், பின்னர் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் பிட்டிப்பனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.