தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதன் முதலாக இடம்பெற்ற தெரிவு!
Batticaloa
Ilankai Tamil Arasu Kachchi
Shanakiyan Rasamanickam
Sri Lanka Politician
Sri Lanka
By Shankar
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதன் முதலாக மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
குறித்த தெரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30-07-2023) இடம்பெற்றது.
சாணக்கியன் அவர்களின் முழு முயற்சியில் மட்டக்களப்பில் வட்டாரக்கிளை, பிரதேசக்கிளை மற்றும் தொகுதிக்கிளை முறையே அமைக்கப்பட்டு இன்றைய தினம் மாவட்ட நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
மேலும் இந்த தெரிவு திருகோணமலை மாவட்ட இலங்கைத்தமிழரசு கட்சி தலைவர் குகதாசன், செல்வேந்திரன், நடராசா, மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்றது.
- தலைவராக : இரா. சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்
- செயலாளராக: ஞா. ஶ்ரீநேசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- பொருளாளராக: சீ. யோகேஷ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- உபதலைவராக: பா. அரியநேத்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- உப செயலாளராக: தி. சரவணபவான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 10 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US