இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள்!
காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலினை றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வாவழங்கியுள்ளார்.
அத்துடன் சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா, டெங்கு தொற்று அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுத்தலை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறினார்.