புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை!
நாட்டில் எதிர்வரும் காலங்களில் புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த யோசனை ரயில்வே திணைக்களத்திற்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது, ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரயில் திணைக்களம், அதிகார சபையாக மாற்றப்பட்டால் மாத்திரமே, இந்த யோசனை நடைமுறைக்கு வரும் என ரயில் திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.
தற்போது ரயில் திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ரயில் பருவச்சீட்டை இரத்து செய்வது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில் பருவச்சீட்டினை இரத்து செய்வதன் மூலம் ரயில் திணைக்களத்திற்கு இலாபம் கிடைக்கும் எனவும் குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றும் யோசனையுடன், இந்தியாவின் முன்னணி வர்த்தகர்கள் ரயில் சேவையில் முதலிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.