நீதிபதி சரவணராஜா பதவி விலகலில் எனக்கு சம்பந்தம் இல்லை! பதறும் சரத் வீரசேகர
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம்
அத்துடன் புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்பது சந்தேகமளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் தமக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை இராஜினாமா செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரீ.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.